பிரபஞ்சம்

Thursday, December 28, 2006

22.இருவர் - உன்னோடு......

உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும்
மறக்காது கண்மணியே

தொன்னூறு நிமிடங்கள்
தொட்டணைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய்
இதயத்தில் கணக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லாயிடங்களில் முத்தங்கள்
விதைத்த மோகத்தில் சில நிமிடம் (உன்னோடு)

எது ஞாயம் எது பாவம்
இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா
அதை பற்றி அறியவில்லை

யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம்
இதுவரைக்கும் கேள்வியில்லை

அச்சம் கலைந்தேன்
ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன்
வெட்கத்தை நீ அணைத்தாய்

கண்டதிரு கோலம்
கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர்
கையிலின்னும் ஒட்டுதடி (உன்னோடு) (உன்னோடு)

2 Comments:

At 3:13 AM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

தொன்னூறு நிமிடங்கள்
தொட்டணைத்த காலம் தான்
அது என்ன ஒரு ஒன்னரைமணிக்காலம் கணக்கு.எதோ ராகுகாலம் மாதிரி. நேரம் போவது கூட தெரியுமா அவர்களுக்கு.

 
At 4:59 AM, Blogger Chinnakutti said...

@தி.ரா.ச ஐயா, இது திரு.வைரமுத்துவிடம் கேட்க வேண்டியது.

 

Post a Comment

<< Home