13. நாளை உலகம் இல்லையென்றால்………….
இருப்பது 24 மணி நேரமே…………….
முதலில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் செல்வேன். அங்கே உள்ளவர்களுடன் விளையாடி, ஆடி, பாடி சந்தோஷமாக கழிப்கேன். பின் என் பயணம் ஆரம்பம் ஆகும்.
நான் பார்க்க விரும்பிய ஊர்/கோயில்களுக்கு செல்வேன். மயிலை கற்பகாம்பாள், சாய் பாபா, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, அஷ்டலஷ்மீ, பெசன்ட் நகர் அருபடை முருகன், முருகனின் அருபடை வீடு, உப்பிலியப்பர், எங்கள் ஊர் நடராஜர், கோவிந்தராஜர், சிவகாமி, தில்லை காளி, மேலும் விருதகிரிசுவரர், மீனாட்சி, இன்னும் சில கோயில்கள், தெய்வத்தின் பெயர் தெரியாததால் குறிப்பிடவில்லை.
மேலும் சில மனித(தெய்வங்களையும்)ர்களையும் சந்திப்பேன். உறவினர்கள் சிலர், இசைஞானி, பாலகுமாரன், சுஜாதா, சிவசங்கரி, அணுராதா ரமணன், இறையன்பு, வை.கோ., சாலமன் பாப்பையா, தென்கச்சி கோ.சுவாமினாதன், கீதா சாம்பசிவம், தி.ரா.ச, பொன்ஸக்கா, கார்திகேயன், கோபாலன் இராமசுப்பு, கொடுமை உஷா, shree, சுபா, ஷ்யாம், யோசிப்பவர், மனசு, நன்மனம், வேதா, குட்டிசுவரு, இன்னும் சிலர். ஐயோ ஒருத்தர விட்டுட்டேன், நம்ம அஸின் தம்பி அம்பி தான்.
எல்லாரையும் பார்த்துட்டு கடைசியா கன்னியாகுமரி சென்று அம்மனை தரிசிச்சுட்டு, வள்ளுவரை பாத்துட்டு விவேகானந்தர் மண்டபம் போய் அவரையும் பாத்துட்டு, அங்கேயே அமைதியா உக்காந்துடுவேன்.
பயணம் : ஆரம்பம் – சென்னை, முடிவு – கன்னியாகுமரி, பாதை – தெரியாது.
“மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மரிக்க வைப்பேன்”


